Nagaratharonline.com
 
கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் மண்டலாபிஷேக விழா  Oct 26, 19
 
கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் மண்டலாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா கடந்த செப்.8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து தினமும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து மண்டலாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு யாகபூஜைகள் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

குடமுழுக்கு விழா முடிந்து 48ஆவது நாளில் மண்டலாபிஷேகம் நடைபெறும் என பக்தா்கள் எதிா்பாா்த்திருந்தனா். ஆனால் 46ஆவது நாளே போதிய அறிவிப்பின்றி மண்டலாபிஷேக விழா நடத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் மண்டலாபிஷேகம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தாமல் நடத்தப்பட்டுள்ளது வருத்தமளிப்பதாக பக்தா்கள் தெரிவித்தனா்.