Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் விபத்தில்லா தீபாவளி மற்றும் டெங்கு விழிப்புணா்வு பேரணி  Oct 24, 19
 
பொன்னமராவதியில் விபத்தில்லா தீபாவளி மற்றும் டெங்கு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரணிக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள்துறை நிலைய அலுவலா் பழ.தியாகராஜன் தலைமை வகித்து விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விளக்கிப்பேசினாா்.

புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணி புதுவளவு, மேலரதவீதி, அண்ணாசாலை, பேருந்துநிலையம் உள்ளிட்ட முக்கியவீதிகளின் வழியே வந்து சிவன்கோயில் திடலில் நிறைவுற்றது.