Nagaratharonline.com
 
மாமல்லபுரத்தில் புதிய கட்டணம்  Oct 19, 19
 
மாமல்லபுரம் வெண்ணை உருண்டை பாறை பகுதியில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசிய பின்னர் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட கட்டணம் வசூலிக்கப்படும் என தொல்லியல் துறை சார்பில் அறிவித்துள்ளது. இதற்கு முன்பு, கடற்கரை கோவில், ஐந்து ரதத்தை பார்வையிட ரூ.40 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது கட்டண வரம்பில் வெண்ணெய் உருண்டை பாறையும் வந்துள்ளது. இதற்கும் ரூ.40 வசூலிக்கப்படும். இங்கு, வெளிநாட்டவர் பார்வையிட ரூ.600 கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.