Nagaratharonline.com
 
சிவகங்கை - சென்னைக்கு அரசு ஏ.சி., பஸ் சேவை  Oct 2, 19
 
சிவகங்கையில் இருந்து சென்னைக்கு படுக்கை வசதியுடன் கூடிய அரசு ஏ.சி., பஸ் சேவை துவக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை பஸ் நிலையத்தில் இருந்து தினமும் இரவு 7:45 மணிக்கு புறப்படும் இப்பேருந்து திருப்புத்துார், புதுக்கோட்டை, திருச்சி வழியாக அதிகாலை 5:30 மணிக்கு சென்னை சென்றடையும். அதே போல் இரவு 7:45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் மற்றொரு பேருந்து சிவகங்கை வந்தடையும்.

இப்பேருந்தில் 15 படுக்கைகளும், 31 இருக்கைகளும் உள்ளன. படுக்கை வசதியுடன் கூடிய இருக்கைக்கு கட்டணமாக திங்கள் முதல் வியாழன் வரை 885 ரூபாயும், வெள்ளி முதல் ஞாயிறு வரை 985 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இருக்கைக்கு 645 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.