Nagaratharonline.com
 
நெற்குப்பை முரு.பழ இல்லத்தில் ( இடிதாங்கி வீடு ) பட்டாபிஷேகம்  Oct 2, 19
 
 
நெற்குப்பை முரு.பழ இல்லத்தில் ( இடிதாங்கி வீடு ) 21-9-2019 அன்று ஏடு எடுத்து, பட்டாலையில் வைத்து, ராமாயணம் படிக்க துவங்கப் பெற்றது.

23 -9 -2019 அன்று இரவு தாலியை எடுத்து வந்து, திருப்பூட்டி
திருக்கல்யாணம் நடைபெற்றது.

27-9 -2019 அன்று பரத்துவாசர் மதிய விருந்து, அனைவருக்கும் அளிக்கப்பட்டது

28- 9 -2019 அன்று , பெரிய வீட்டு
மாவிளக்கு ஏற்றி , முரு பழ பங்காளிகள்
அனைவரும் மாவிளக்கு வைத்து , பட்டு சாத்தி
பட்டாபிஷேகம், தொட்டி கட்டுதல், விடையாற்றி
படித்து பிறகு பங்காளிகள். பெண்மக்கள் அனைவருக்கும்
காளாஞ்சி வழங்கப்பட்டது .

திரளான பக்தர்களும் பொதுமக்களும் பட்டாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இராமசாமியின் இறைஅருள் பெற்றனர்