Nagaratharonline.com
 
வகுப்பறையில் பேராசிரியர் திட்டியதால் கல்லூரி மாணவர் தற்கொலை  Sep 16, 19
 
மேலைச்சிவபுரியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் கார்த்திக் (வயது 18). இவர் மேலைச்சிவபுரியில் உள்ள கல்லூரியில் பி.காம்., முதலாமாண்டு படித்து வந்தார். இவரை அதே கல்லூரியில் வணிகவியல் துறையில் பேராசிரியராக பணிபுரியும் துரைப்பாண்டி என்பவர் வகுப்பறையில் வைத்து அவதூறாக திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த கார்த்திக் எலிமருந்தை தின்று விட்டார். உயிருக்கு போராடிய அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் இறந்தார்.

இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து, பேராசிரியர் திட்டியதால் கார்த்திக் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்.