Nagaratharonline.com
 
NEWS REPORT: காரைக்குடியில் சிக்ரியில் தயாரான பேட்டரியில் இயங்கும் மின் ரிக்க்ஷா சேவை  Jul 26, 19
 
காரைக்குடியில் சிக்ரியில் தயாரான பேட்டரியில் இயங்கும் மின் ரிக்க்ஷா சேவை கட்டணமில்லாத சேவையாக துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

சிக்ரியின் 72வது நிறுவன நாள் விழா காரைக்குடி சிக்ரி வளாகத்தில் உள்ள அப்துல்கலாம் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

சிக்ரியின் தொழில்நுட்பத்தில் தயாரான லெட் ஆசிட் பேட்டரியில் இயங்கும் மின்-ரிக் ஷாவை நிதி ஆயோக்கின் உறுப்பினரான சரஸ்வத் மக்களுக்கு கட்டணமில்லா சேவையாக துவங்கி வைத்தார். இந்த கட்டணமில்லாத மின் ரிக் ஷா சேவை காரைக்குடியில் காலை 8:00 மணிமுதல் மாலை 6:00 மணி வரை செயல்படும். இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இது ஆராய்ச்சிக்காக சோதனை முறையில் இயக்கப்படுகிறது.