Nagaratharonline.com
 
கல்லல் ரெயில்நிலையம் முன்பு பல மாதங்களாக வீணாகி வரும் காவிரி கூட்டுக்குடிநீர்  Jul 3, 19
 
கல்லல் ரெயில் நிலையம் முன்பு காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்களாக குடிதண்ணீர் வீணாகி வருகிறது. இதை உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது பருவமழை பொய்த்து வறட்சியால் பொதுமக்கள் தண்ணீருக்காக அலைந்து வரும் வேளையில் இதுபோல் தண்ணீரை வீணாக்கி வருவது மிகவும் வேதனையளிக்கும் செயலாக உள்ளது. நீரின்றி அமையாது உலகு என்பதற்கேற்ப குடிதண்ணீரை வீணாக்காமல் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை சரி செய்து குடிதண்ணீர் வீணாவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்