Nagaratharonline.com
 
கண்டரமாணிக்கம் மஞ்சுவிரட்டு: காளைகள் முட்டி இருவர் பலி  Apr 25, 19
 
கண்டரமாணிக்கம் மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டி இருவர் பலியாகினர். கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கண்மாய் பொட்டலில் மஞ்சுவிரட்டு நடந்தது. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் இருந்து 300 க்கும் மேற்பட்ட காளைகள், 150 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர்.

காளைகள் முட்டி 63 பேர் காயமடைந்தனர். திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் 13 பேர் சேர்க்கப்பட்டனர்.இதில் நாச்சியாபுரம் கே.வலையபட்டியைச் சேர்ந்த தங்கராஜ் 26, அமராவதிபுதுார் அருகே கல்லுப்பட்டி சேவுகன் 45, ஆகியோர் இறந்தனர்.

தங்கராஜ் சில நாட்களுக்கு முன்தான் சிங்கப்பூரில் இருந்து விடுமுறையில் சொந்த ஊர் வந்தார். மஞ்சுவிரட்டு காண வந்து உயிரை பறிகொடுத்தார்.