Nagaratharonline.com
 
தேசிய நெடுஞ்​சா​லை​க​ளில் வேகத்​தடை அமைப்பு  May 9, 10
 
திருப்​பத்​தூர்,​மே 7: ​ ​ ​ திருப்​பத்​தூ​ரில்,​​ தேவ​கோட்டை -​ மதுரை நெடுஞ்​சா​லை​க​ளில் விபத்​து​க​ளைத் தவிர்க்க வேகத்​தடை மற்​றும் ஓளி​ரும் பிர​திப​லிப்​பான் பொருத்​தும் பணி நடை​பெற்​றது.​

​ ​ ​ ​ ​ சிவ​கங்கை மாவட்ட காவல் கண்​கா​ணிப்​பா​ளர் உத்​த​ர​வின்​படி காவல் துறை சார்​பாக விபத்​தைத் தடுக்க மாவட்​டம் முழு​வ​தும் ரூ,​9 லட்​சம் செல​வில் விபத்து தடுப்பு நட​வ​டிக்​கை​கள் எடுக்​கப்​பட்டு வரு​கி​றது.​

​ ​ ​ அதில் திருப்​பத்​தூர் தாலு​கா​விற்​கென மதுரை சாலை,​​ அர​சி​னர் மருத்​து​வ​மனை அரு​கி​லும்,​​ புதுப்​பட்​டி​யில் பள்ளி அரு​கி​லும்,​​ திருப்​பத்​தூர் துணை கண்​கா​ணிப்​பா​ளர் முரு​கே​சன் மேற்​பார்​வை​யில் வேகத்​தடை பொறுத்​த​பட்​டது.​

​ ​ ​ 16 எச்​ச​ரிக்கை போர்​டு​க​ளும்,​​ காவ​லர்​க​ளுக்கு 14 ஓளி​ரும் சட்​டை​க​ளும்,​​ மது​அ​ருந்தி ஓட்​டு​ப​வர்​க​ளைக் கண்​கா​ணிக்க 4 ஆல்​ஹ​ஹால் மைக்​கு​க​ளும்,​​ சாலை​யின் நடுவே ஓளி​ரும் பிர​திப​லிப்​பான் முத​லி​யன வெள்​ளிக்​கி​ழமை வழங்​கப்​பட்​டது.​

​ ​ ​ ​ நிகழ்ச்​சி​யில் ஆயு​தப்​படை சார்பு ஆய்​வா​ளர் ஜெய​சீ​லன்,​​ திருப்​பத்​தூர் போக்​கு​வ​ரத்து சார்​பு​ஆய்​வா​ளர் குரு​சாமி,​​ போக்​கு​வ​ரத்து தலை​மைக் காவ​லர் சண்​மு​கம் மற்​றும் காவ​லர்​கள் கலந்து கொண்​ட​னர்.​

​ ​ இது​கு​றித்து டி.எஸ்.பி.​ முரு​கே​சன் கூறு​கை​யில் மாவட்ட கண்​கா​ணிப்​பா​ளர் உத்​த​ர​வின்​பே​ரில் சாலை விபத்​து​க​ளைத் தடுக்க நட​வ​டிக்கை எடுத்து வரு​கி​றோம்.​

விபத்து உண்​டா​கும் வளை​வு​க​ளில் பிர​திப​லிப்​பான் பொருத்​தும் பணி​யும்,​​ பள்ளி ,மருத்​து​வ​மனை அரு​கி​லும் வேகத்​தடை அமைக்​கப்​பட்​டுள்​ளது என்று கூறி​னார்.

Source:Dinamani
May 8