Nagaratharonline.com
 
கண்டவராயன்பட்டியில் செயல்படாத ஏ.டி.எம்.,  Mar 19, 19
 
கண்டவராயன்பட்டியில் கடந்த சில நாட்களாக வங்கி ஏடிஎம் இயங்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கண்டவராயன்பட்டி போக்குவரத்து மையமாக அப்பகுதியில் உள்ளது. 20க்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராமத்தினர் தினசரி வந்து செல்கின்றனர். இங்குள்ள தனியார் மற்றும் தேசியமயமான வங்கிகளை பயன்படுத்துகின்றனர்.

தேசியமயமான வங்கிக்கு மட்டும் ஏடிஎம் உள்ளது. நூற்றுக்கணக்கானோர் தினசரி பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த ஏடிஎம் இயங்கவில்லை. அவசரத்திற்கு வங்கியிலுள்ள பணத்தை எடுக்க 8 கி.மீ.தொலைவிலுள்ள திருப்புத்துாருக்கு வந்து செல்கின்றனர்.