Nagaratharonline.com
 
NEWS REPORT: சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்கத்தின் சுற்றுலா  Mar 8, 19
 
 
சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்கத்தின் இரு நாள் சுற்றுலாவாக,
26 உறுப்பினர்களுடன் பிப்ரவரி 23 ,24 தேதிகளில், திருச்செந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்று வந்தனர்.

திருச்செந்தூர் முருகன் கோவில், நவதிருப்பதி ஆலயங்கள், மணப்பாடு கடற்கரை, காரையார் சொரிமுத்தையனார் ஆலயம் மற்றும் சில ஆலயங்கள் சென்று, அகமும் மனமும் குளிர தரிசனம் செய்து வந்தனர்.

ஆலய தரிசனம் மற்றும் அகஸ்தியர் அருவியில் ஆனந்தமாய் குளித்தது, உறுப்பினர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது.

திருச்செந்தூர் நகர விடுதியில் அறைகள் முன்பதிவு செய்து கொடுத்த திரு. PL. வைரவன் அவர்களுக்கும் சுற்றுலாவை சிறப்பாக நடத்தி தந்த M.P.சாத்தப்பன் அவர்களுக்கும் மாலை சிற்றுண்டி, டீ, காப்பி வழங்கியவர்களுக்கும், சுற்றுலாவின் போது ஒத்துழைப்பு கொடுத்த உறுப்பினர்களுக்கும் சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.