Nagaratharonline.com
 
தென் சென்னையில் குடிநீர், 'கட்'  Feb 16, 19
 
கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில், பராமரிப்பு பணி நடக்க உள்ளதால், தென்சென்னையின் பெரும்பாலான பகுதிகளில், இரு நாட்களுக்கு, குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும்.


காஞ்சிபுரம் மாவட்டம், நெம்மேலி, கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில், 19ம் தேதி காலை, 6:00 மணியில் இருந்து, மறுநாள் மாலை, 6:00 மணி வரை, பராமரிப்பு பணி நடக்க உள்ளது.இதனால், திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையார், வேளச்சேரி, பெசன்ட்நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, சோழிங்கநல்லுார், ஈஞ்சம்பாக்கம், நீலங்கரை போன்ற பகுதிகளில், குடிநீர் வினியோகத்தில், தடை ஏற்பட வாய்ப்புள்ளது.


எனவே, மேற்கண்ட பகுதியைச் சேர்ந்தமக்கள், இரு நாட்களுக்கு, தேவையான அளவு குடிநீரை, சேமித்து வைத்து கொள்ள, குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.லாரி மூலம் குடிநீர் பெற விரும்புவோர், கீழ்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என, வாரியம் அறிவித்துள்ளது.


மயிலாப்பூர், மந்தைவெளி - 81449 30909; அடையார், வேளச்சேரி, பெசன்ட்நகர், திருவான்மியூர் - 81449 30913; கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி - 81449 30914; சோழிங்கநல்லுார், ஈஞ்சம்பாக்கம், நீலங்கரை - 81449 30915 எண்களை, மக்கள் தொடர்பு கொள்ளலாம்.