Nagaratharonline.com
 
கம்பராமாயணம் ஒப்பித்தல் போட்டி  Feb 12, 19
 
காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் கம்ப ராமாயண போட்டி பிப். 24 ல் மகர்நோன்பு பொட்டல் கார்த்திகேயன் தொடக்க பள்ளியில் நடக்கிறது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மனப்பாட போட்டியும், கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டியும் நடக்கின்றன. மனப்பாட போட்டிக்கு 'திருவடி தொழுத படலம் 21 ம் பாடல் முதல் 41 ம் பாடல் வரையும்,' பேச்சு போட்டியில் 'சுந்தர காண்டத்தில் அனுமனின் உருவமும், உதவியும், சுந்தர காண்ட கவிநலம், சுந்தரகாண்டத்தில் தனிப்பெருஞ்சிறப்பு' என்ற தலைப்புகளில் பேச வேண்டும், என கம்பன் கழக ஒருங்கிணைப்பாளர்கள் சேதுபதி, சிதம்பரம் தெரிவித்தனர்.