Nagaratharonline.com
 
வஞ்சினிப்பட்டி மஞ்சுவிரட்டில் 10 பேர் காயம்  Jan 28, 19
 
வஞ்சினிப்பட்டியில் நடந்த மஞ்சுவிரட்டில் 10 பேர் காயமடைந்தனர். வஞ்சினிப்பட்டியில் விவசாயம் செழிக்க தை 12ல் மஞ்சுவிரட்டு நடத்தப்படும். காளைகளின் கால்கள் வயல்களில் படுவதால் பயிர் செழிக்கும்என்ற நம்பிக்கையால் அப்பகுதியில் மஞ்சுவிரட்டு நடத்தப்படுகிறது.நேற்று இப்பகுதியிலுள்ள வயல்களில் கட்டுமாடுகளாக காளைகள் அவிழ்க்கப்பட்டன.மாங்குடி, மணக்குடி, காரையூர் கம்பனுார், நெற்குப்பை, தெக்கூர், சிங்கம்புணரி, திருப்புத்துார் பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கான காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். அதில் மாடு முட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.