Nagaratharonline.com
 
திருக்களம்பூர் : பூச்சொரிதல் விழா  May 9, 10
 
பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூர் கொடியேரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நடந்தது . பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு திருக்களம்பூர், முத்தமிழ் மன்றம் , வள்ளல் பாரி நற்பணி மன்றம் , தச்சம்பட்டி , குமாரபட்டி , கருப்புகுடிபட்டி , எஸ்.வி.மங்களம் , நெடுவயல் , அய்யாபட்டி , கருதகோடான்பட்டி , அண்ணா நகர் , நரங்கியம்பட்டி உட்பட பல்வேறு ஊர்களிலிருந்து பூத்தட்டுகள் , பால்குடங்கள் பக்தர்கள் எடுத்துவந்து அம்மனுக்கு செலுத்தினர். பின்னர் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

source : Dinamalar