Nagaratharonline.com
 
தேவகோட்டை பித்தளை பானைக்கு மவுசு  Dec 16, 18
 
தேவகோட்டை:பொங்கலுக்காக நகரத்தாரின் பிரசித்தி பெற்ற தெக்கலுார் பித்தளை பானைகள் விற்பனை அதிகரித்து வருவதால், தயாரிப்பு பணி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் மும்முரமாக நடந்து வருகிறது.இங்கு வெள்ளி, சில்வர், பித்தளை பாத்திரங்கள் தயாரிப்பு கூடங்கள் அதிகளவில் உள்ளன.

நகரத்தார் தங்கள் இல்ல திருமணத்திற்கு இங்கிருந்து தான் சீர்வரிசை பாத்திரங்களை வாங்குவர்.பொங்கல் பண்டிகைக்காக பெண் வீட்டார் சீதனமாக வழங்க தற்போது பித்தளை பொங்கல் பானைகள் அதிகளவில் வாங்க துவங்கியுள்ளனர். கடலுார், தெக்கலுார், உருளி ஆகிய வகைகளில் பானைகள் தயாராகிறது. தெக்கலுார் பானைகளை அதிகம் வாங்குவதால் உற்பத்தி அதிகரித்துள்ளன. இது தவிர பித்தளை அடுப்பு, அண்டா உள்ளிட்ட பொருட்களும் தயாராகிறது.தேவகோட்டையில் உள்ள பாத்திர கடைகள் மட்டுமின்றி மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதிக்கும் விற்பனைக்கு செல்கிறது. பொங்கல் பானை ஒன்று எடைக்கேற்ப 500 முதல் 700 ரூபாய் வரை விற்கப்படுகிறது