Nagaratharonline.com
 
NEWS REPORT: நகரத்தார் நற்பணி மன்றம் – சென்னை–பிள்ளையார் நோன்பு விழா  Dec 14, 18
 
நகரத்தார் நற்பணி மன்றம் – சென்னை தனது 8-ம் ஆண்டு, பிள்ளையார் நோன்பு விழாவை 13/ 12/2018 அன்று, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம் அருகில் உள்ள ஸ்ரீ மஹாலட்சுமி மகாலில் கொண்டாடியது.

திருவான்மியூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் வசிக்கும் நகரத்தார்கள், தங்கள் குடும்பத்துடன் பிள்ளையார் நோன்பு விழாவில் கலந்து கொண்டு, விநாயகரை வழிபட்டு. இழை எடுத்து, இறை அருள் பெற்றனர்.

விழாவிற்கு வந்திருந்த நகரத்தார்களை, மன்றத்தின் தலைவர், முனைவர் M. சீனிவாசன் M.S., Ph.D., வரவேற்று உரை ஆற்றினார் .

மன்ற உறுப்பினர்களில், திரு. முனைவர் M. சீனிவாசன் M.S., Ph.D., அவர்களும் Er. M.ராமசாமி. M.E (தலைமை பொறியாளர் TNHB (ஓய்வு )அவர்களும் இழைகளை எடுத்துக்கொடுத்தனர்.

வலையபட்டி கவிஞர் கரு. சுந்தரமகாலிங்கம் அவர்கள் மங்கலப் பொருட்களை ஏலம் விட்டபிறகு, S.சண்முகம், A.கருப்பையா, ஆகியோரின் உபசரிப்பில் இரவு விருந்து வழங்கப்பட்டது. நிறைவாக , செயலாளர் AR.சுப்பிரமணியன் நன்றி கூற, பிள்ளையார் நோன்பு விழா இனிது நிறைவேறியது .