Nagaratharonline.com
 
திருப்புத்துாரில் ரோடு விரிவாக்கம்  Nov 30, 18
 
திருப்புத்துாரில் சிவகங்கை ரோட்டிலிருந்து புதுக்கோட்டை ரோடு வரை விரிவுபடுத்தும் பணி துவங்கியுள்ளது.புதுக்காட்டாம்பூரில் சிவகங்கை ரோட்டிலிருந்து மதுரை ரோடு, காரைக்குடி ரோடு, புதுக்கோட்டை ரோடு வழியாக என்.புதுார் வரை நெடுஞ்சாலைத்துறையினரால் விரிவுபடுத்தப்படுகிறது. ரூ 10 கோடி செலவில் 3 மீ., அகலப்படுத்தப்படுவதால் சில மாதங்களுக்கு முன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டன. தற்போது மின்கம்பங்கள் மாற்றும் பணி சிவகங்கை ரோட்டில் துவங்கியுள்ளது. மேலும் புதிய பாலம், விரிவாக்கப்பணிகளும் நடந்து வருகிறது.நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், ரோடு விரிவாக்கத்திற்காக 130 மின்கம்பங்கள் தள்ளி ஊன்றப்படுகின்றன. ஏழு புதிய பாலங்கள், ஒரு விரிவாக்கப்பாலம் கட்டப்படுகிறது.இரண்டு மாதத்தில் பணி நிறைவடையும், என்றனர்.