Nagaratharonline.com
 
காரைக்குடி : ஓய்வு தாசில்தார் கையெழுத்திட்டு போலி பட்டா: ரூ.4 லட்சம் மோசடி  Nov 26, 18
 
காரைக்குடி முத்துப்பட்டினம் 3 வது வீதியை சேர்ந்த வீரப்ப செட்டியார் மகன் சுப்பிரமணியன்,69. இவருக்கும், இவரது தம்பிகளுக்கும் சொந்தமாக காரைக்குடி குறிச்சிபிரிவு அருகே 48 சென்ட் வீட்டடி மனை காலி இடம் உள்ளது.

அந்த இடத்தை சேது, தொத்தை சுப்பு என்ற சுப்பிரமணியன் இருவரும் கடந்த 1993 ல் பணிஓய்வு பெற்ற சாக்கோட்டை துணை தாசில்தார் முருகையாவை போன்று கையெழுத்திட்டு கடந்த 2017 ல் போலி பட்டா தயாரித்துள்ளனர்.அதன் மூலம் செல்வராஜ், தனசேகரன், தொத்தை சுப்பு என்ற சுப்பிரமணியன் ஆகிய 3 பேரும் சுப்பிரமணியன் மற்றும் அவரது தம்பிகளுக்கு சொந்தமான 48 சென்ட் இடத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியை காளையார்கோவிலை சேர்ந்த அழகுபிரியாவிற்கும், மற்றொரு பகுதியை ராமரத்தினம், மறைமலைசெல்வன், சேது ஆகியோர் வீரசோழன் கிராமத்தை சேர்ந்த காஞ்சனாவிற்கும் காளையார்கோவில் மற்றும் வீரசோழன் சார் பதிவாளர் அலுவலகங்களில் தனித்தனியாக ரூ.4 லட்சத்திற்கு அடமான கடன் வைத்தாக பத்திரப்பதிவு செய்து மோசடி செய்துள்ளனர்.

இதுகுறித்து சுப்பிரமணியன் சிவகங்கை எஸ்.பி., ஜெயச்சந்திரனிடம் புகார் செய்தார். மாவட்ட குற்றப்பிரிவு எஸ.ஐ.,க்கள் அருள்மொழிவர்மன், வெள்ளைச்சாமி, ஏட்டு திருமுருகன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தி, செல்வராஜ்,52, தொத்தை சுப்பு என்ற சுப்பிரமணியன்,59, இருவரையும் கைது செய்தனர். ராமரத்தினம், காஞ்சனா,அழகுபிரியா, மறைமலை செல்வன், தனசேகரன், சேது ஆகிய 6 பேரை தேடி வருகின்றனர்.