Nagaratharonline.com
 
நெற்குப்பை : மருமகனை தாக்கிய மாமனாருக்கு வலை  May 7, 10
 
சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையை சேர்ந்தவர் விஜயக்குமார் (30). உதவி வேளாண்மை அதிகாரியாக திருமயத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பொன்னமராவதியை சேர்ந்த பழனியப்பன் மகள் விஜயலட்சுமிக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து ஒரு குழந்தை உள்ளது. இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிவகங்கை கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் விஜயகுமார் 5 ம் தேதி திருமயத்திற்கு பணிக்கு வந்தார். அப்போது மாமனார் பழனியப்பன் அவரது மகன், மருமகள் ஆகியோர் திருமயம் வந்து விஜயகுமாரிடம் பேசியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் பழனியப்பன் அவரது மகன் சாத்தலிங்கம் மருமகள் வள்ளி ஆகியோர் சேர்ந்து விஜயகுமாரை அடித்து உதைத்தனர். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக திருமயம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது பற்றி விஜயகுமாரின் தந்தை மகாலிங்கம் திருமயம் போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ வானதி வழக்குப்பதிந்து பழனியப்பன் மற்றும் 2 பேரை தேடி வருகிறார்.


source : Dinamalar