Nagaratharonline.com
 
திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா : நவம்பர் 13-ல் சூரசம்ஹாரம்  Nov 6, 18
 
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா நவ. 8 தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவம்பர் 13-ம் தேதி நடைபெறுகிறது.

இவ்விழாவின் தொடக்க நாளான 8-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் ஆகியவை நடைபெறுகின்றன. காலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளியதும், யாகபூஜை தொடங்குகிறது.

காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும்.

தினசரி நிகழ்ச்சிகள்வரும் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை தினமும் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.சூரசம்ஹாரம்முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 13-ம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும். மாலை 4.30 மணிக்கு மேல் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொள்வர்.திருக்கல்யாணம்வரும் 14-ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.