Nagaratharonline.com
 
மின் இணைப்பு துண்டிப்பு: இருட்டில் புதுவயல் நூலகம்  Oct 14, 18
 
புதுவயல் நுாலகத்தில் 30 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன; 3,400 வாசகர்கள் உள்ளனர். 2014 முதல் இக்கட்டடத்தில் இயங்கி வருகிறது. மின்கட்டணம் செலுத்தாததால் ஐந்து மாதங்களுக்கு முன் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் வாசகர்கள் இருட்டில் புத்தகம் படிக்கும் நிலை உள்ளது.

வெட்கையாக இருப்பதால் வாசகர்கள் சிரமப்படுகின்றனர்.
வாசகர் வட்டத் தலைவர் தமிழ்மதி நாகராஜன் கூறியதாவது: பேரூராட்சி சார்பில் நுாலக வரியாக ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. கடந்த 2015 முதல் 10 ஆயிரம் ரூபாய் மின்கட்டணம் செலுத்தவில்லை. இதனால் மின் இணைப்பை வாரியம் துண்டித்தது. இருட்டாக இருப்பதால் வாசகர்கள் புத்தகங்களை தேர்வு செய்ய முடியல்லை. இதனால் வாசகர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 125 புரவலர்கள் தொகையும் இருப்பு உள்ளது. மாவட்ட நுாலக அலுவலரிடம் கூறியும், நடவடிக்கை இல்லை, என்றார்.