Nagaratharonline.com
 
பட்டங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் குருப்பெயர்ச்சி: கோபுரதீபம்  Oct 4, 18
 
பட்டமங்கலம் இறைவன் குரு வடிவில் எழுந்தருளி கார்த்திகைப் பெண்களுக்கு சாப விமோசனம் அளித்த சிறப்பைப் பெற்றது தலமாகும். இங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி கோவிலில் மட்டுமே குருபகவான் கிழக்கு முகம்பார்த்து எழுந்தருளுகிறார். இதனால் பிரசித்திபெற்ற குருதலமாக விளங்குகிறது.

இன்று இரவு 10:05 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி அடைகிறார். அதை முன்னிட்டு காலை முதல் பக்தர்கள் குருபகவானை தரிசனம் செய்யலாம். வழக்கமான பூஜை தவிர சிறப்பு பூஜைகள் நடைபெறாது. மூலவர் சந்தனக் காப்பில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து ஆலவிருட்சத்துடன் கார்த்திகை பெண்களுடன் கூடிய உற்ஸவர் மூலவர் சன்னதிக்கு முன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள்வார். பக்தர்கள் காலை முதல் உற்ஸவருக்கு அர்ச்சனை செய்து வழிபடலாம். பின்னர் இரவு 10.10 மணிக்கு குருப்பெயர்ச்சியின் போது ராஜ கோபுரத்திற்கு தீபாராதனை நடைபெறும்.குருப்பெயர்ச்சி ஹோம புனித நீர் தெளிக்கப்படும்.

தொடர்ந்து இரவு முழுவதும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்.சிறப்பு வரிசை ஏதுமில்லாமல், ஒரேவரிசையில் சென்று பக்தர்கள் கட்டணமின்றி தரிசனம் செய்யஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.