Nagaratharonline.com
 
குருவிக்கொண்டான்பட்டி :முதியவர் கொலை  May 3, 10
 
பனையபட்டி அருகே வீட்டில் தனிமையில் இருந்த முதியவர் ஞாயிற்றுக்கிழமை மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

​ ​ பனையபட்டி அருகேயுள்ள குருவிக்கொண்டான்பட்டியைச் சேர்ந்தவர் ​ சொ.​ ரவிச்சந்திரன் ​(70).​ இவர் சனிக்கிழமை இரவு தான் பணியாற்றும் ​ வீட்டில் தங்கியிருந்த நிலையில்,​​ மறுநாள் காலையில் வீட்டினுள் ரத்தக் காயங்களுடன் இறந்துகிடந்தார்.

​ ​ இதுகுறித்து தகவறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.​ மூர்த்தி சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார்.​ இதையடுத்து,​​ மோப்ப நாய் மற்றும் கை விரல் ரேகை நிபுணர் குழு வரவழைக்கப்பட்டது.​ போலீஸôர் விசாரிக்கின்றனர்.​ இதனிடையே இந்தக் கொலை குறித்து விசாரிக்க தனிப்படைகளை அமைத்து மூர்த்தி உத்தரவிட்டார்.


source ; Dinamani.