Nagaratharonline.com
 
தேவகோட்டையில் மீண்டும் ஆக்கிரமிப்பு  Aug 30, 18
 
தேவகோட்டையில் கடந்த மாதம் 17ந்தேதி நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அப்போது மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாத வகையில் கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தற்போது ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. தேவகோட்டை திருப்பத்துார் ரோடு, வாடியார் வீதி, தியாகிகள் ரோடு பகுதிகளில் நடைமேடையை பயன்படுத்த முடியாத அளவில் ஆக்கிரமிப்பு உள்ளது.

டூவீலர்களை நிறுத்த இடமில்லாமல் மக்கள் நோ பார்க்கிங் பகுதியில் வண்டிகளை நிறுத்துகின்றனர்.