Nagaratharonline.com
 
'கேப்' சேவை: மெட்ரோ பயணியர் வரவேற்பு  Aug 12, 18
 
சென்னையில் உள்ள குறிப்பிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில், நேற்று துவக்கப்பட்ட, ஷேர் ஆட்டோ மற்றும், 'கேப்' கார் சேவை, பயணியர் மத்தியில் வரவேற்பை பெற்றது.

பரங்கிமலை, ஆலந்துார், ஈக்காடுதாங்கல், அசோக்நகர், கோயம்பேடு, கிண்டி ,திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையங்களில், நேற்று முதல், ஷேர் ஆட்டோ வசதி துவக்கப்பட்டது.அதேபோல், ஆலந்துார், வடபழனி, கோயம்பேடு, அண்ணாநகர் கிழக்கு, தேனாம்பேட்டை மற்றும் டி.எம்.எஸ்., ஆகிய நிலையங்களில், 'கேப்' கார் வசதி துவங்கப்பட்டன.

மூன்று கி.மீ., துாரத்திற்கு, ஷேர் ஆட்டோவில், 10 ரூபாயும்; 'கேப்' காரில், 15 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப் பட்டது.பயணியர், மெட்ரோ ரயிலில் பயணம் செய்த டிக்கெட்டை, ஓட்டுனரிடம் காட்டி, உரிய கட்டணத்தை செலுத்தி, பயணம் செய்தனர்.மெட்ரோ ரயில் நிலையத்தை சுற்றி, 3 கி.மீ., துாரமுள்ள பயணியருக்கு, மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

இதர, ஆட்டோ, கால் டாக்சி கட்டணத்தை விட, குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய முடிந்தது என, மெட்ரோ ரயில் பயணியர் கூறினர்.