Nagaratharonline.com
 
திருச்சியிலிருந்து மதுரை, கோவை, சேலத்துக்கு 1 To 1 பஸ்கள்  Aug 8, 18
 
திருச்சியில் இருந்து, சேலம், மதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கு, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 1 டூ 1 சேவை பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தற்போது, 1 டூ 1 சேவைக்கு மக்களிடம் வரவேற்பு இருப்பதால், திருச்சியில் இருந்து, சேலம், மதுரை, கோவை போன்ற நகரங்களுக்கு, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 1 டூ 1 சேவை துவங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, சேலத்துக்கு, தினமும், எட்டு பஸ்கள்; மதுரைக்கு, மூன்று; கோவைக்கு, ஐந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. 'பயணியரின் தேவைக்கு ஏற்ப, சேவை அதிகரிக்கப்படும்' என, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.