Nagaratharonline.com
 
வைரவன்பட்டி பிரமோற்ஸவம் துவக்கம்  Aug 6, 18
 
வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயிலில் வடிவுடையம்மை கோயிலில் வைரவசுவாமி பிரமோற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

நகரக் கோயில்களில் ஒன்றான இங்கு ஆடி மாதம் வைரவருக்கு 11 நாள் பிரமோற்ஸவம் நடைபெறும். நேற்று காலை 7:00 மணிக்கு வெள்ளி கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள், அபி ேஷகங்கள் நடந்து தர்ப்பைபுல் கட்டப்பட்டு வெண்பட்டு அணிவிக்கப்பட்டது.

தொடர்ந்து வளரொளி விநாயருக்கும் வயிரவ சாமிக்கும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் சுவாமிக்கும், கொடிமரத்திற்கும் தீபாராதனை நடந்தது. அடுத்து விநாயகரும் வயிரவரும் பிரகார வலம் வந்தனர். மாலையில் மூலவருக்கு காப்புக்கட்டி பிரமோற்ஸவம் துவங்கியது. இரவில் சிம்மவாகனத்தில் சுவாமி திருவீதி வலம்

வந்தனர்.தினசரி காலையில் வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடும், இரவு 8:00 மணிக்கு வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெறும். ஆக., 13ல் தேரோட்டமும், ஆக.,14ல் தீர்த்தவாரியும், ஆக.,15ல் திருக்கல்யாணமும் நடைபெறும்.