Nagaratharonline.com
 
பொன்னமராவதி: பஸ் வரும்... ஆனா வராது  May 3, 10
 
பொன்னமராவதியில் டிரைவர் இல்லாமல் பல வழித்தடங்களில் பஸ் இயக்க முடியாமல் பொதுமக்கள், பயணிகள் பரிதவிக்கின்றனர்.



புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு டிப்போவில் இருந்து சுமார் 40க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. பல்வேறு ஊர்களுக்கு பல வழித்தடங்களில் டவுன்பஸ், ரூட் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் சரியான நேரத்திற்கு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அலுவலகத்தில் இருந்து வரும் பதில்கள் டிரைவர் இல்லாமல் பஸ் ட்ரிப் எடுக்க முடியவில்லை, கால் மணி நேரத்தில் வந்து விடும் என்று கூறுகின்றனர். ஆனால் டிரைவரை அனுப்பி பஸ் இயக்கும் போது எப்படியும் 1 மணி நேரம் ஆகிவிடுகிறது. கடந்த 1ம் தேதி 4ம் நம்பர் டவுன், பொன்னமராவதி குளத்துப்பட்டி வழியாக திருச்சி செல்லும் பஸ்களுக்கு டிரைவர் இல்லாமல் இயக்க தாமதம் ஏற்பட்டது. பொதுமக்கள் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். அரசு பஸ் வரும்... ஆனா வராது.. என்று பயணிகள் புலம்புகின்றனர்.


source : Dinamalar