Nagaratharonline.com
 
7 நிமிடங்களில் முடிந்த தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு  Jul 5, 18
 
சென்னை எழும்பூரில் இருந்து தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய 7 நிமிடங்களிலேயே முடிந்தது.

ரயில்களில், 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை மத்திய ரயில்வே கொண்டு வந்துள்ளது. இந்த ஆண்டு நவம்பர் 6 ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால், நவ., 2, ரயிலில் பயணம் செய்ய இன்றும், நவ., 3ல் பயணம் செய்ய நாளையும் முன்பதிவு செய்ய வேண்டும். நவ., 4, 5ம் தேதிகளில் செல்ல, முறையே, வரும், 7, 8ம் தேதிகளில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நவம்பர் 2 ம் தேதி செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. டிக்கெட் முன்பதிவிற்காக தெற்கு ரயில்வே சார்பில் 250 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. ஆன்லைன் மற்றும் நேரில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருந்தும் முன்பதிவு, துவங்கிய 7 நிமிடங்களிலேயே முடிந்தது. இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்