Nagaratharonline.com
 
தேவகோட்டையில் நிரம்பி வழியும் குப்பை  Apr 25, 18
 
தேவகோட்டையில் 27 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டிலும் வீடுகளில் குப்பை சேகரிக்கப்பட்டு, இரண்டு இடங்களில் கொட்டப்படும். அவை மொத்தமாக நகராட்சி வண்டிகளில் கொண்டு செல்லப்பட்டு, ரஸ்தாவில் உள்ள குப்பைகிடங்கில் கொட்டப்படும்.
கடந்த இரண்டு நாட்களாக சேகரிக்கப்பட்ட குப்பை அள்ளப்படாமலேயே உள்ளது.குப்பையில் கொட்டப்படும் கோழி கழிவால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று ஏற்படுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

நகராட்சி கமிஷன் (பொ), ஜெயபாலிடம் கேட்ட போது: சனி, ஞாயிறு
விடுமுறை என்பதால் சில இடங்களில் குப்பை அள்ளப்படாமல் உள்ளது. இன்று அனைத்தும்
அப்புறப்படுத்தப்படும், என்றார்.