Nagaratharonline.com
 
கீழப்பூங்குடியில் ரூ.13 லட்சம் நகை கொள்ளை: இருவர் கைது  Apr 25, 18
 
சிவகங்கை திருமலை மெயின் ரோட்டில் வசித்தவர் வைரவன். இவர் குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார்.கீழப்பூங்குடியில் உள்ள இவரது பூர்வீக வீடு பூட்டி கிடந்தது. சில நாட்களுக்கு முன் சிலர் மாடி வழியாக ஏறி, பீரோவில் இருந்த 36 பவுன் நகைகள், அரை கிலோ தங்கக்கட்டி, வெள்ளி பாத்திரங்களை கொள்ளையடித்தனர். இவற்றின் மதிப்பு ரூ.13 லட்சம்.

வைரவனின் மனைவி கண்ணாத்தாள் புகார்படி மதகுபட்டி போலீசார் விசாரித்தனர். நேற்று ஒக்கூர் அருகே நாட்டரசன்கோட்டை விலக்கில் பஸ்சுக்காக 2 பேர் சாக்குடன் காத்திருந்தனர்.

ரோந்து சென்றபோலீசார் சந்தேகத்தில் விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த சாக்கில் வெள்ளிக்குடம், ெகாலுசு, வெள்ளி டம்ளர்கள் இருந்தன. அவை கீழப்பூங்குடி வைரவன் வீட்டில் கொள்ளையடித்தவை என தெரியவந்தது.பிடிபட்டவர்களில் ஒருவர் கொல்லங்குடி சாத்தப்புலி விஸ்வநாதன்,39. மற்றொருவர் தேவகோட்டை கீழ்குடி பெர்க்மான்ஸ்,27, எனத்தெரிந்தது.