Nagaratharonline.com
 
கண்டவராயன்பட்டியில் குடிநீர் பிரச்னை  Apr 21, 18
 
கண்டவராயன்பட்டியில் கிராமத்தினர் கிணற்றடி காளியம்மன் கோயில் ஊரணி நீரை மக்கள் குடிநீராகவும்,சமைக்கவும் பயன்படுத்தி வந்தனர்.தற்போது ஊரணி வற்றி உள்ளே உள்ள கிணற்றிலும் நீர் வற்றி விட்டது.

கண்மாயிலுள்ள போர்வெல்களில் இரண்டு மோட்டார்கள் பழுதாகி தண்ணீர் வருவதில்லை. தற்போது பல குழாய்களில் தண்ணீர் வருவதில்லை.

புகார் செய்தும் நடவடிக்கை இல்லை என்று கிராமத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.

கண்ணன் கூறுகையில், மோட்டார்கள் பழுதானதால் சரி செய்ய பல நாட்களாகி விடுகிறது..கண்மாயில் உள்ள போர்வெல்களில் இரண்டு மோட்டார்கள் பழுதாகி விட்டன. கூடுதலாக பொதுக்குழாய்களில் தண்ணீர் விட வேண்டும்.' என்றார்.