Nagaratharonline.com
 
ஆ.தெக்கூரில் கோயில் நில பிரச்னை : 6 பேருக்கு ஒரு ஆண்டு சிறை  Apr 30, 10
 
திருப்புத்தூர் அருகே ஆ.தெக்கூரில், கோயில் நிலத்தை தனியாருக்கு விற்பதாக மோசடியில் ஈடுபட்டதாக ஆறு பேருக்கு தலா ஒரு ஆண்டு சிறை; 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, கோர்ட் தீர்ப்பளித்தது. இங்குள்ள சிவன் கோயிலில், கடந்த 2000 ல், தலைவராக சொக்கலிங்கம், செயலாளராக அழகப்பன் இருந்தனர். கோயில் செலவிற்காக நிர்வாகி வெங்கடாசலத்திடம் நிதி கோரினர்.



இதன்படி, கோயிலுக்கு சொந்தமான எட்டு சென்ட் இடத்தை, 1.08 லட்ச ரூபாய்க்கு, அவருக்கு விற்க முடிவு செய்தனர். முன்பணமாக 60 ஆயிரம் ரூபாய் பெற்றனர். இதற்கு நிர்வாகிகள் காந்தி(68), ராமநாதன்(73),சீனிவாசன் (66), மருதப்பன் (68), சொக்கலிங்கம் (87), சீனிவாசன்(73) ஒப்புதல் அளித்தனர். ஆனால் அவருக்கு நிலத்தை மாற்றி கொடுக்க வில்லை.



இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவில், வெங்கடாசலம் புகார் செய்தார். மாஜிஸ்திரேட் கோர்ட் டில் விசாரணை நடந்தது. விசாரணை காலத்தில், செயலாளர் அழகப்பன் இறந்தார். நிலத்தை மாற்றி தராமல், மோசடியில் ஈடுபட்டதாக, நிர்வாகிகள் ஆறு பேருக்கும் தலா ஒரு ஆண்டு சிறை; 5,000 ரூபாய் அபராதம் விதித்து, மாஜிஸ்திரேட் ரவி உத்தரவிட்டார்

source : Dinamalar