Nagaratharonline.com
 
திருப்புத்துார் போஸ்ட் மாஸ்டரிடம் செயின் பறித்த வாலிபர் கைது  Apr 4, 18
 
திருப்புத்துார் தபால் அலுவலகத்தில் போஸ்ட் மாஸ்டராக வளர்மதி உள்ளார். நேற்று மதியம் 12:00 மணிக்கு சேமிப்புக் கணக்கு துவக்குவதாக வந்த ஒரு வாலிபர், வளர்மதி மீது மஞ்சள் பொடி துாவி, கழுத்திலிருந்த செயினை பறித்தார். வளர்மதி செயினை கையில் பிடித்தவாறே சப்தம் போட்டார். வாலிபர் கையில் அறுத்த செயினுடன் ஓடி விட்டார்.

அப்பகுதியில் உள்ளவர்கள் தப்பி ஓடிய வாலிபரை ஆட்டோவில் ஒரு பெண் ஏற்றிச் செல்வது குறித்தும் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் காரைக்குடி பைபாஸ் ரோட்டில்ஆட்டோவில் வாலிபரையும் பெண்ணையும் பிடித்தனர்.

விசாரணையில் அவர் பிள்ளையார்பட்டியை சேர்ந்த வடிவேல்,27 என்பதும், உடனிருந்த பெண் தபால் அலுவலகத்தின் எதிர் வீட்டில் வசிக்கும் கலைவாணி என்பதும் தெரிந்தது.

திருப்புத்துார் டவுன்போலீசார் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.