Nagaratharonline.com
 
NEWS REPORT: Message from Dr. E.Gnanam, Muthu Group of Pharmacy, Chennai  Mar 16, 18
 
அன்புள்ள நகரத்தார் பெருமக்களுக்கு வணக்கம். சிவலோக பதவி அடைந்து விட்ட நகரத்தார் உடலங்களை வைத்து சடங்குகள் செய்வதற்கும், பட்டினத்தார் ஸ்தலத்தில் எரியூட்டுவதற்கும், மிக உன்னதமான ஒரு சேவையை செய்து வரும் புது தண்டாயுதபாணி அறக்கட்டளைக்கு நமது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .

ஆயினும் சமீபத்தில் நடந்த சில கசப்பான சம்பவங்களால் மாலை 6.00 மணி முதல் காலை 6.00 மணி வரை பூதவுடல்களை அனுமப்பதில்லை என்று அறக்கட்டளையில் முடிவெடுத்து விட்டார்கள். இதனால் நகரத்தார்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி நகரத்தார் சங்கம் மூலம் கடிதம் எழுதி உள்ளனர். ஐக்கிய நகரத்தார் சங்கத்திற்கும் எழுதியுள்ளனர். உடனடியாக அதன் தலைவர் நீதி அரசர் ஏ.ஆர். லக்ஷ்மணன் கூட்டம் ஏற்பாடு செய்து விவாதித்து அறக்கட்டளையிலும் மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்வது என்றும் அதன்படி மேதகு நீதி அரசர், நிர்வாக அறங்காவலர் திரு. எம்.சி.டி. பெத்தாச்சி அவர்களிடம் எடுத்துரைத்துள்ளார். உடனடியாக எம்.சி.டி. பெத்தாச்சி அவர்கள் இடையூறில்லாமல் இரவு பகல் எந்த நேரமும் இச்சேவைக்கு நகரவிடுதித் தனியிடத்தை உபயோகப்படுத்த அறக்கட்டளை சார்பில் அனுமதி அளித்துள்ளார்கள்.

முதலில் இருந்த தாழ்வான பழைய கட்டிடத்தைப் புதுப்பித்து நகரத்தார்கள், துயரத்தில் இருக்கும்போது சௌகரியமாகவும், விரிவாகவும் பெரிய இடத்தில் ஈமச் சடங்குகளைச் செய்ய வசதி ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நமது மனமார்ந்த நன்றியை நகரத்தார் சார்பாக தெரிவித்து கொள்கிறேன்.

மேற்கூறிய பிரச்சினையை உடனடியாக முயற்சி செய்து நகரத்தார்கள் பயன்பெற ஏற்பாடு செய்து கொடுத்த டாக்டர். நீதி அரசர் ஏ.ஆர். லக்ஷ்மணன் அண்ணன் அவர்களுக்கும், திரு. எம்.சி.டி. பெத்தாச்சி அண்ணன் அவர்களுக்கும் சென்னை நகரத்தார் சங்கங்களின் சார்பாகவும் நகரத்தார்கள் சார்பாகவும் கோடான கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இத்தகவலை நம் நகரத்தார் பெருமக்களுக்கு உடன் அனுப்பிய O. சோமசுந்தரம் அவர்களுக்கும் நன்றி.

அன்புடன்
E. ஞானம்