Nagaratharonline.com
 
பராமரிப்பில்லாத தேவகோட்டை அழகப்பா பூங்கா  Mar 9, 18
 
தேவகோட்டை ராம்நகர் பகுதியில் உள்ளது அழகப்பா பூங்கா. குழந்தைகள் விளையாட்டு பகுதி தனியாக உள்ளது. நீருற்றுகள் இருக்கிறது தண்ணீர் தான் வருவதில்லை.

சமீபத்தில் புதுப்பிக்கிறோம் என்ற பெயரில் நிழல் தரும் மரங்கள் வெட்டப்பட்டது. எந்த புது பணிகளும் செய்யவில்லை. பொம்மைகள் சேதமடைந்துள்ளது. இதற்கு கட்டணம் ரூ. 2 வசூல் செய்யப்படுகிறது.

இரவு 8:00 மணி வரை பூங்கா திறந்திருக்க வேண்டுமென்ற அறிவிப்பு இருந்தாலும் 7:40 மணிக்கே அனைத்து விளக்குகளும் அணைக்கப்படுகிறது. பார்க் மட்டுமில்லை. அந்தபகுதியே இருளாக காட்சியளிக்கிறது. பராமரிப்பில்லாத பூங்காவை பராமரிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.