Nagaratharonline.com
 
காரைக்குடியில் நாளை பொருள்காட்சி தொடக்கம்.  Apr 29, 10
 
காரைக்​குடி,​ஏப்.28: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தொழில்வணிகக் கழகம் சார்பில் 5-வது தொழில் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்காட்சி கம்பன் மணிமண்டபத்தில் வெள்ளிக்கிழமை ​(ஏப்.30) முதல் தெள்ôடங்கி ஏப்.9-ம் தேதி நிறைவடைகிறது.

​ ​ சென்னை,​​ மதுரை,​​ கோவை,​​ திருச்சி போன்ற நகரங்களிலிருந்து பர்னிச்சர்கள்,​​ புதிய வகை டி.வி,​​ குளிர்சாதனப் பொருள்கள்,​​ மின்னணு சாதனங்கள்,​​ அழகு சாதனப் பொருள்கள்,​​ துணிவகைகள் என 70-க்கும்மேற்பட்ட அரங்குகள் இப்பொருள்காட்சியில் இடம் பெறுகின்றன.

​ ​ நுழைவுக்கட்டணம் எதுவுமின்றி குழந்தைகளை மகிழ்விக்க எண்ணற்ற விளையாட்டுக்கள் இடம் பெறுகின்றன.

வித,விதமான உணவு வகைகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.​ வேலைநாள்களில் மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரையிலும்,​​ விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் ​ இரவு 9 மணிவரையிலும் நடைபெறும்.​ ​ ​ வெள்ளிக்கிழமை நடைபெறும் துவக்க விழாவில் காரைக்குடி நகர்மன்றத்தலைவர் எஸ்.​ முத்துத் துரை பொருட்காட்சியை திறந்துவைக்கிறார்.​​ ​ நிறைவு விழாவில் காரைக்குடி சட்டப் பேரவை உறுப்பினர் என்.​ சுந்தரம்,​​ ஐ.ஓ.பி.​ வங்கிப்பொதுமேலாளர் டி.​ தேனப்பன் ஆகி

யோர் கலந்துகொள்கின்றனர் என்று காரைக்குடி தொழில்வணிகக் கழகத் தலைவர் முத்து.​ பழனியப்பன்,​​ செயலர் சாமி.​ திராவிடமணி ஆகியோர் தெரிவித்தனர்.​ ​ ​


Source: Dinamani