Nagaratharonline.com
 
சிங்கம்புணரி: சித்தர் முத்துவடுக சுவாமி கோயிலில் சித்ரா பௌர்ணமி  Apr 29, 10
 
சிங்கம்புணரி,ஏப்.28: ​ ​ ​ ​ ​ சிவகங்கை மாவட்டம்,​​ சிங்கம்புணரி சித்தர் முத்துவடுக சுவாமி கோயிலில் சித்ரா பௌர்ணமி புதன்கிழமை நடைபெற்றது.​ ​

​ ​ ​ சிங்கம்புணரி வணிகர் நலச் சங்கம் சார்பில் 69-ம் ஆண்டு விழாவாக சித்ரா பௌர்ணமி விழா நடைபெற்றது.​ விழாவையொட்டி காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரம் செய்யப்பட்டன.

​ ​ அதனைத் தொடர்ந்து சீரணி அரங்கிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தனர்.​ மாலையில் சுவாமிக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

​ ​ பின்னர் பெண்கள் மாவிளக்கு எடுத்தனர்.​ இரவு சுவாமி திருத்தேரில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.​ பல்வேறு அமைப்புகள் சார்பாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.​ விழா ஏற்பாடுகளை சிங்கம்புணரி வணிகர் நலச் சங்கத்தினர் செய்திருந்தனர்.


Source : Dinamani