Nagaratharonline.com
 
கீழச்சிவல்பட்டியில் பூட்டிய வீட்டில் நகை திருட்டு  Dec 12, 17
 
கீழச்சிவல்பட்டி அம்மன் சன்னதியைச் சேர்ந்த லெட்சுமணன் மனைவி சோலை,(63) வீடு உள்ளது.இவர் கடந்த டிச.,2ல் வீட்டை பூட்டி விட்டு தஞ்சாவூருக்கு உறவினர் வீட்டிற்கு சென்றார்.
அவரது கணவர் லெட்சுமணன் நினைவு நாளை முன்னிட்டு சோலையின் மருமகள் வீட்டைத் திறந்து சாமி கும்பிட்டுள்ளார்.
கடந்த டிச.,10ல் தஞ்சாவூரிலிருந்து வந்த சோலை வீட்டைத் திறந்து பார்த்த போது பூஜை அறையில் பீரோவில் வைத்திருந்த9 பவுன் நகை மற்றும் ரூ 10 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரிந்தது. வீட்டின் பின்புற கதவை திறந்து
திருடர்கள் வீட்டில் நுழைந்து திருடியது தெரியவந்துள்ளது மேலும் கீழச்சிவல்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.