Nagaratharonline.com
 
கண்டனூரில் பிளாட்பாரம் நீளத்தை குறைத்த ரயில்வே:டாட்டா காட்டும் எக்ஸ்பிரஸ்  Oct 21, 17
 
கண்டனுார் - புதுவயல் ரயில்வே ஸ்டேஷனில் அகல ரயில்பாதை பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், பிளாட்பாரத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க முடியாத நிலை உள்ளது.

காரைக்குடி - பட்டுக்கோட்டை வரையில் 83 கி.மீ., மீட்டர் கேஜ் பாதையில் ரயில் போக்குவரத்து கடந்த 2012-ல் நிறுத்தப்பட்டு, அகல ரயில்பாதை பணிகள் முடிந்து, 2018 மார்ச்சுக்குள் ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் அறிவித்துள்ளார்.

காரைக்குடியை அடுத்த ஸ்டேஷனாக கண்டனுார் - புதுவயல் ஸ்டேஷன் உள்ளது. இரு பேரூராட்சிகளை இந்த ரயில்பாதை இணைக்கிறது.
புதிதாக அமைக்கப்பட்ட பிளாட்பாரம் 270 மீட்டர் மட்டுமே உள்ளது. 420 மீட்டருக்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே எக்ஸ்பிரஸ் ரயில் நிற்க முடியும். எனவே எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் அளவுக்கு பிளாட்பாரத்தின் நீளத்தை அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.