Nagaratharonline.com
 
காரைக்குடி : பால்குடம் எடுக்கும் விழா  Apr 26, 10
 
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு,​​ காரைக்குடி செக்காலைக் கோட்டை நகரத்தார்கள் சார்பில்,​​ குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதப் பெருமானுக்கு 3-ம் ஆண்டாக புதன்கிழமை ​(ஏப்.​ 28) பால்குடம் எடுக்கும் விழா நடைபெற உள்ளது.

​ ​ ​ ​ விழாவையொட்டி,​​ வள்ளுவர் நகர் கோட்டை விநாயகர் கோயிலிலிருந்து காலை 5 மணிக்கு பால்குடம் புறப்பட்டு குன்றக்குடியை சென்றடையும்.​ சங்கம் சார்பில் குடத்துக்கும்,​​ பாலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.​ ​ ​ ​ ​ 11 நாள்கள் விரதம் மேற்கொண்டு பக்தர்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தவேண்டும்.​ அனைவருக்கும் உணவுக்கான ஏற்பாடும்,​​ காரைக்குடி திரும்ப வாகன வசதியும் செய்திருப்பதாக,​​ நகரத்தார் சங்கத் தலைவர் எஸ்என்.​ சொக்கலிங்கம்,​​ செயலர் ஏ.​ அடைக்கப்பன்,​​ நிகழ்ச்சி அமைப்பாளர் என்.​ நாச்சியப்பன் ஆகியோர் தெரிவித்தனர்.