Nagaratharonline.com
 
திருக்களம்பூர் சிவன் கோயிலில் இலங்கை அமைச்சர் வழிபாடு  Apr 24, 10
 
புதுக்கோட்டை, ஏப். 21: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கோயிலில் செவ்வாய்க்கிழமை இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் வழிபட்டார்.

இலங்கையின் மின் சக்தி எரிபொருள் கிராம மேம்பாடு, விளையாட்டுத் துறை, தொழில் துறை மற்றும் சமூக நலத் துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் தொண்டைமான். அண்மையில் தமிழகம் வந்த இவர், பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூர் அருள்மிகு கதலிவனேசுவரர் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை வழிபட்டார்.

அவருக்கு கோயில் அர்ச்சகர்கள் மற்றும் ஊர் முக்கியப் பிரமுகர்கள் பரிவட்டம் அணிவித்து வரவேற்றனர்.

இக்கோயிலில் சீதாதேவி, லவகுசன், வால்மீகிரிஷி ஆகியோருக்கு உணவாகப் படைக்கப்பட்ட அமுது வாழை (கதலி). தண்ணீர் ஊற்றப்படாமல், கடினமான மண் பகுதியான கோயிலின் சுற்றுப் பிரகாரப் பகுதியில் கோயிலின் தல விருட்சமான வாழை மரங்கள் வளர்ந்துள்ளதை அவர் வியப்புடன் பார்த்தார் (இங்குள்ள நூற்றுக்கணக்கான வாழை மரங்களின் இலைகள், பழங்கள் என எதுவும் எந்த உபயோகத்திற்கும் பயன்படுத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்).


source : Dinamani