Nagaratharonline.com
 
காவிரி புஷ்கர விழாவை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை க்கு சிறப்பு கட்டண ரயில்.  Sep 13, 17
 
காவிரி புஷ்கர விழாவை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை க்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு விருத்தாசலம் திருச்சி வழியாக இயக்கப்படும். மேலும் தாம்பரம்- செங்கோட்டை ரயில் செப்.,15,16,18.20,21,22,23,25,27,28,29 ஆகியதேதிகளில் அதிகாலை 5மணிக்கு புறப்படும். அதே போல் செங்கோட்டை-தாம்பரம் ரயில் 16,17,19,21,22,23, 24,26,28,30ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு செப்.,14 காலை 8 மணிக்கு துவங்குகிறது.