Nagaratharonline.com
 
6 வகையான விதிமீறலில் ஈடுபட்டால் மட்டுமே அசல் ஓட்டுநர் உரிம சோதனை: காவல்துறை விளக்கம்  Sep 6, 17
 
6 விதிமுறை மீறல்களில் ஈடுபடுபவர்களிடம் மட்டுமே அசல் வாகன ஓட்டுநர் உரிமத்தை கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் குழு தெரிவித்துள்ளது.

அத்தகைய 6 விதிமீறல்களில் ஈடுபட்டு போலீஸாரிடம் சிக்குபவர்களிடம் மட்டுமே அசல் ஓட்டுநர் உரிமம் கேட்கப்பட உள்ளதால் வாகன ஓட்டிகள் பயமின்றி பயணிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

6 விதிமீறல்கள் என்னென்ன என்பது குறித்த உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்:

1. மொபைல் போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல்

2. அதி வேகமாக வாகனம் ஓட்டுதல்

3. மதுபோதையில் வாகனம் ஓட்டுதல்

4. வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவு பாரம் ஏற்றுதல்

5. போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் செல்லுதல்

6. சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றுதல்

மேற்கூறிய 6 விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும். அசல் ஓட்டுநர் உரிமத்தை சோதனை செய்வதற்காக தனியாக வாகன சோதனை நடைபெறப் போவதில்லை. வழக்கமான சோதனையே நடைபெறும்.

இந்தச் சோதனை மூலம் பறிமுதல் செய்யப்படும் வாகன ஓட்டுநர் உரிமம், மோட்டார் வாகனச் சட்டப்படி வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் குறைந்தது 3 மாதங்களாவது தற்காலிக நீக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.