Nagaratharonline.com
 
கோவிலுார் மடாலய வளாகத்தில் ரூ.3 கோடியில் கண் மருத்துவமனை  Aug 29, 17
 
கோவிலுார் மடாலய வளாகத்தில் கானல் அறக்கட்டளை சார்பில் ரூ.3 கோடியில் கட்டப்பட்ட கண் மருத்துவமனையை சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.கோவிலுார் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமி, கருவூலம் மற்றும் கணக்கு துறை செயலர் ஜவகர், அரவிந்த் கண் மருத்துவமனை துணை சேர்மன் நாச்சியார், மதுரை டி.ஐ.ஜி., பிரதீப்குமார், கஸ்டம்ஸ் அதிகாரி வாச சேஷகிரி ராவ், அரவிந்த கண் மருத்துவமனை தரகட்டுப்பாட்டு இயக்குனர் ரவீந்திரன், கானல் அறக்கட்டளை மேனேஜிங் டிரஸ்டி கிருஷ்ணன், இணை டிரஸ்டி பி.எல்.கே.பழனியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

டாக்டர் கிருஷ்ணன் கூறியதாவது: முதற்கட்டமாக ரூ.3 கோடியில் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுார் மடாலயம் சார்பில் 2.5 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட உள்ளது. அதில் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்படும். இந்த மருத்துவமனையில் ஏழைக்கு இலவசமாக கண் பரிசோதனை
செய்யப்படும்,என்றார்