Nagaratharonline.com
 
01/09/2017 முதல் வாகன ஓட்டிகள் அசல் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை  Aug 29, 17
 
அசல் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: வரும் 1-ம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அசல் உரிமம் வைத்திருக்காவிட்டால் 3 மாதம் சிறை தண்டைன அல்லது ரூ500 அபராதம் விதிக்கப்படும். சீருடை அணிந்த எந்த காவல் துறை அதிகாரியும் வாகன ஓட்டுநர்களின் அசல் உரிமத்தை கேட்கும்போது காண்பிக்க வேண்டும் என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.