Nagaratharonline.com
 
தேவகோட்டை நகர சிவன்கோயில் : மீனாட்சி திருக்கல்யாணம்  Apr 24, 10
 
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகர சிவன்கோயிலில் மீனாட்சி திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்குப் பாத்தியப்பட்ட சிவன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் ஐந்தாம் நாள் விழாவாக திருக்கல்யாணம் நடைபெற்றது.

மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை, ரெங்கநாதப்பெருமாள் நடத்தி வைத்தார். இதில் நகரத்தார்களும் நகர பிரமுகர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நகரத்தார் கோயில் டிரஸ்டிகள் செய்திருந்தனர்.

Source : Dinamani