Nagaratharonline.com
 
திருப்​பத்​தூர்: ரயில் டிக்​கெட் முன்​ப​திவு மையம் துவக்​கம்  Apr 21, 10
 
திருப்​பத்​தூர்,​​ ஏப்.​ 18:​ சிவ​கங்கை மாவட்​டம்,​​ திருப்​பத்​தூர் தபால் அலு​வ​ல​கத்​தில் ​ரயில் டிக்​கெட் முன்​ப​திவு மையம் வெள்​ளிக்​கி​ழமை முதல் துவங்​கப்​பட்​டுள்​ளது.​ ​

​ நிகழ்ச்​சிக்கு,​​ ரயில்வே கோட்ட வணிக மேலா​ளர் சுந்​தர் முன்​னிலை வகித்​தார்.​ அஞ்​சல் கோட்ட கண்​கா​ணிப்​பா​ளர் குழந்​தை​சாமி வர​வேற்​றார்.​ முன்​ப​திவு மையத்தை மதுரை தென்​மண்​டல அஞ்​சல் சேவை​கள் இயக்​கு​நர் ஜெய​சங்​கர் துவக்கி வைத்​தார்.​​ இந்த மையம்,​​ அஞ்​சல வேலை நாள்​க​ளில் காலை 8 மணி முதல் மாலை 2.30 வரை செயல்​ப​டும்.​ ​

​ டிக்​கெட் முன்​ப​திவு செய்ய எந்த அடை​யாள அட்​டை​யும் தேவை இல்லை.​ இந்​தியா முழு​வ​தும் உள்ள ரயில்​க​ளுக்கு இங்கு முன்​ப​திவு செய்து கொள்​ள​லாம்.​ டிக்​கெட்டை ரத்து செய்​து​கொள்​ளும் வச​தி​யும் உள்​ளது.​

இந்த சேவை,​​ தமி​ழ​கத்​தில் ​ ஸ்ரீபெ​ரும்​பு​தூ​ருக்கு அடுத்​த​ப​டி​யாக திருப்​பத்​தூ​ரில் மட்​டுமே உள்​ளது.​ ​

​ இதன் துவக்க நிகழ்ச்​சி​யில்,​​ உத​விக் கோட்​டக் கண்​கா​ணிப்​பா​ளர் ரகு​பதி,​​ கணினி மேலா​ளர் மதி​வா​ணன்,​​ விற்​பனை அதி​காரி ஜெய​சீ​லன்,​​ சேவி​யர்,​​ ஆய்​வா​ளர் உமா,​​ ஆகி​யோர் பங்​கேற்​ற​னர்.

Source:Dinamani